Thursday, July 8, 2010

பூமாலையில் ஓர் மல்லிகை

திரைப்படம்: ஊட்டி வரை உறவு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1967

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது இன்னும்
வேண்டுமா என்றது

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts