Showing posts with label அச்சம் என்பது மடமையடா. Show all posts
Showing posts with label அச்சம் என்பது மடமையடா. Show all posts

Monday, May 8, 2017

அச்சம் என்பது மடமையடா

படம் - மன்னாதி மன்னன் 
பாடல் - கண்ணதாசன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி 
பாடியவர் டி..எம். செளந்தரராஜன்


அச்சம் என்பது மடமையடா 
அஞ்சாமை திராவிடர் உடைமையடா 
ஆறிலும் சாவு நூறிலும் சாவு 
தாயகம் காப்பது கடமையடா 
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா 
அஞ்சாமை திராவிடர் உரிமையடா 
ஆறிலும் சாவு நூறிலும் சாவு 
தாயகம் காப்பது கடமையடா 
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா 
அஞ்சாமை திராவிடர் உரிமையடா 
ஆறிலும் சாவு நூறிலும் சாவு 
தாயகம் காப்பது கடமையடா 
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா 
அஞ்சாமை திராவிடர் உரிமையடா 
ஆறிலும் சாவு நூறிலும் சாவு 
தாயகம் காப்பது கடமையடா 
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா 

Bookmark and Share

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts