Showing posts with label ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன். Show all posts
Showing posts with label ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன். Show all posts

Monday, May 8, 2017

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன்

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி (ஊரைத்)
பச்சைக் கொழந்தையின்னு பாலூத்தி வளத்தேன்
பாலைக் குடுச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடி (ஊரைத்)
ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ
என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்டக் காயத்துல தேள்வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி (ஊரைத்)
நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளைக் கரை சேத்து ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
பணங்காசைக் கண்டுபுட்டா புலி கூட புல்லைத் தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒன்னு அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி (ஊரைத்)

Bookmark and Share

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts