Showing posts with label ஆடி அடங்கும் வாழ்க்கையடா. Show all posts
Showing posts with label ஆடி அடங்கும் வாழ்க்கையடா. Show all posts

Monday, July 6, 2009

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

திரைப்படம்: நீர்க்குமிழி

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண்
மூடினால் காலில்லாக் கட்டிலடா!

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே வாழ்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்!

வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts